தற்போது தமிழ் சினிமா உலகில் நடிக்கவில்லை என்றாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு உண்டான மவுசு இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இப்போதும் ரசிகர்களின் மனதில் இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . மேலும் சினிமா அரசியல் என்று இரண்டிலும் கலக்கிக் கொண்டு வந்த விஜயகாந்த் சமீபகாலமாக உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் .
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் விஜயகாந்துக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர் . அதில் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மதுர வீரன் என்ற ,
படத்தில் நடித்திருந்தார் . ஆனால் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை . இப்படி இருக்கும் நிலையில் மகனை தூக்கி விடுவதற்காக களம் இறங்கியுள்ளாராம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . அந்த வகையில் அடுத்ததாக சண்முக பாண்டியன் ஹீரோவாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம் .
அந்தப் படத்தில் தலைப்பை அறிவிப்பதற்காக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ரசிகர்களை பார்க்க உள்ளாராம். குறிப்பாக தன்னுடைய தந்தை விஜயகாந்த் தான் தன்னுடைய அடுத்த படத்தின் பெயரை அறிவிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம் சண்முக பாண்டியன் . மேலும் கேப்டன் விஜயகாந்த் ,
பல வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்திக்க உள்ளதால் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர் ரசிகர்கள். இன்னும் சொல்லப்போனால் அவர் எப்போது வெளியில் வந்து தலை காட்டுவார் என்று தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது…