May 6, 2024

சிவகார்த்திகேயனின் நடிப்பை பார்த்து பயந்து இருக்கிறேன் ..!! வெளிப்படையாக சொல்லிய வாரிசு நடிகர் ..!! இதை விட ஒரு நடிகருக்கு என்ன வேண்டும் ..??

திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  சாதாரண மிமிக்ரி கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ,

பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மானிடம் எந்த ஹீரோவின் நடிப்பை பார்த்து நீங்கள் பயந்து இருக்கீங்க என்று கேட்டுள்ளனர்.  அதற்காக நான் சிவகார்த்திகேயனின் நடிப்பை பார்த்து பயந்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார் . மேலும் சிவகார்த்திகேயன் துல்கர் சல்மான்,

இருவருமே  ஒரே காலகட்டத்தில் தான் சினிமாவிற்கு வந்தவர்கள் . மேலும் துல்கர் சல்மானும் தான் ஒரு பெரிய நடிகரின் மகன் என்ற பந்தா இல்லாமல் சிவகார்த்திகேயனுடன் நட்புடன் தான் இப்போதும் இருந்து வருகிறாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *