தற்போதுள்ள பல இளம் நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு தன்னுடைய நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கமல்ஹாசன். மேலும் கமல்ஹாசன் எந்த அளவிற்கு பெயர் புகழை சம்பாதித்தாரோ , அதே அளவிற்கு சர்ச்சைகளையும் சம்பாதித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் .
இதனால் இவருடன் நடிப்பதற்கு பல நடிகைகள் பயந்து நடுகிறார்கள். அந்த லிஸ்டில் நடிகை நயன்தாராவும் ஒருவராவார் . ஐயா என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவை கலக்கி வந்த டாப் நடிகர்களான ரஜினி, விஜய் ,அஜித் ,சூர்யா ,விக்ரம் போன்ற பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார் . ஆனால் கமலுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை நடிகை நயன்தாரா . இதற்குக் காரணம் என்னவென்றால்,
அவருடைய படத்தில் கண்டிப்பாக முத்த காட்சிகள் இருக்கும். இதனால் தான் அவரை 20 வருடமாக ஒதுக்கி வருவதாக கூறப்படுகிறது . ஆனால் தற்போது இருபது வருட போராட்டத்திற்குப் பிறகு கமலுடன் இணைய உள்ளாராம் நடிகை நயன்தாரா. அந்த வகையில் தற்போது,
இயக்குனர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளாராம் நடிகை நயன்தாரா . இந்த படத்தின் அப்டேட் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது…