நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இந்த படத்தை முடித்த கையோடு இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு முழுநேர அரசியலில் களம் இறங்குவதாக விஜய் அறிவித்திருந்தார். இதனால் விஜயின் கடைசி படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது .
அப்படி விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் இயக்குனர்களின் லிஸ்டில் கார்த்திக் சுப்புராஜ் ,வெற்றிமாறன், எச் வினோத் ,அட்லீ போன்ற பல இயக்குனர்களின் பெயர் அடிபட்டு வந்தது . ஆனால் திரும்பவும் தெலுங்கு இயக்குனருக்கே வாய்ப்பு கொடுத்துள்ளாராம் விஜய் . அந்த வகையில்,
சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் என்ற படத்தின் இயக்குனரான திரிவிக்ரம் இயக்க உள்ள புதிய படத்தில் தான் விஜய் நடிக்க இருக்கிறாராம் . இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் தெலுங்கு இயக்குனரா வேண்டவே வேண்டாம் என்று கதறி வருகின்றனர்…