அல்போன்ஸ் புத்திரன் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி பிரபலமான அல்போன்ஸ் புத்திரன் கடந்த 2013ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது .
இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் தான். இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் . இதனால் இவருடைய அடுத்த படத்திற்கு மிகப்பெரிய,
எதிர்பார்ப்பு இருந்து வந்தது . ஆனால் இவர் கடைசியாக இயக்கிய கோல்ட் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது . இதை யாடுத்து தற்போது சாண்டி மாஸ்டர் ,கோவை சரளா, சம்பத்ராஜ் ,போன்றவர்களை வைத்து கிப்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார் ,
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவை விட்டு விலகிக் கொள்கிறேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன். அந்த வகையில் இவருக்கு autism spectrum disorder நோய் இருப்பதாகவும், இதனால் சினிமாவில் இருந்து,
விலகிக் கொள்கிறேன் என்றும், ஆனால் பாடல்கள் மற்றும் குறும்படங்களை இயக்குவேன் என்றும் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் சினிமாவை விட்டு மட்டும் போகாதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்…