தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளின் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து பைரவா , சர்கார் போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் .இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் ரசிகர்களுக்காக,
பல தரமான படங்களை கொடுத்திருக்கிறார். அரசியல் அவருடைய அடுத்த கட்டம் . நாம் அவருக்கு கண்டிப்பாக ஆதரவு கொடுக்க வேண்டும் . குறிப்பாக விஜய் சார் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும் ஒரு குழந்தை அழுத வீடியோ இணையத்தில் பார்த்தேன் .
ஒரு குழந்தைக்கே இப்படி இருக்கு என்றால் , நமக்கு எப்படி இருக்கும் என்று வேதனையை பகிர்ந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …