May 7, 2024

அந்த விஷயத்தில் கார்த்தி தான் சிறந்தவன் ..!! மனதார ஒப்புக்கொண்ட சூர்யா ..!! அண்ணன் தம்பினா இப்படி இருக்கணும் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல நடிகர்களாகவும்,  நிஜ வாழ்க்கையில் நல்ல அண்ணன்,  தம்பிகளாகவும் வாழ்ந்து வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி . மூத்த நடிகரான சிவகுமாரின் வாரிசுகளான சூர்யா மற்றும் கார்த்தி தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர்கள் என்ற அந்தஸ்தில் இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ஜப்பான் படத்தின் ,

டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  அந்த வகையில் தம்பிக்காக சூர்யாவும் கலந்து கொண்டார்.  அந்த நிகழ்ச்சியில் கார்த்தி குறித்து பேசிய சூர்யா கூறியதாவது,  கார்த்தி என்னைவிட சினிமாவில் அதிக ஆர்வம்,

கொண்டவர் . மேலும் அவர் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.  அவர் மட்டும் நினைத்து இருந்தால் எத்தனையோ படங்களில் நடித்திருக்கலாம் . ஆனால் வித்தியாசமான கதைக்களங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் . இன்னும் சொல்லப்போனால்,

என்னை விட எல்லா விஷயத்திலும் என்னுடைய தம்பியான கார்த்தி தான் சிறந்தவன் . அப்படி என்னை விட என்னுடைய குடும்பத்திற்கு அதிக நேரம் செலவிடுவது கார்த்தி மட்டும் தான் .அது மட்டுமல்லாமல் எங்களுடைய அப்பா , அம்மாவை ஒரு வருஷத்துக்கு இரண்டு அல்லது,

மூன்று முறையாவது வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து சென்று வருவார் . இதை இதுவரை நான் கூட பண்ணியதில்லை . அதனால்தான் அவர் என்னைவிட சிறந்தவர் என்று கூறினேன் என்று பேசி இருந்தார் நடிகர் சூர்யா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *