தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல நடிகர்களாகவும், நிஜ வாழ்க்கையில் நல்ல அண்ணன், தம்பிகளாகவும் வாழ்ந்து வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி . மூத்த நடிகரான சிவகுமாரின் வாரிசுகளான சூர்யா மற்றும் கார்த்தி தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர்கள் என்ற அந்தஸ்தில் இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ஜப்பான் படத்தின் ,
டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தம்பிக்காக சூர்யாவும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கார்த்தி குறித்து பேசிய சூர்யா கூறியதாவது, கார்த்தி என்னைவிட சினிமாவில் அதிக ஆர்வம்,
கொண்டவர் . மேலும் அவர் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவர் மட்டும் நினைத்து இருந்தால் எத்தனையோ படங்களில் நடித்திருக்கலாம் . ஆனால் வித்தியாசமான கதைக்களங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் . இன்னும் சொல்லப்போனால்,
என்னை விட எல்லா விஷயத்திலும் என்னுடைய தம்பியான கார்த்தி தான் சிறந்தவன் . அப்படி என்னை விட என்னுடைய குடும்பத்திற்கு அதிக நேரம் செலவிடுவது கார்த்தி மட்டும் தான் .அது மட்டுமல்லாமல் எங்களுடைய அப்பா , அம்மாவை ஒரு வருஷத்துக்கு இரண்டு அல்லது,
மூன்று முறையாவது வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து சென்று வருவார் . இதை இதுவரை நான் கூட பண்ணியதில்லை . அதனால்தான் அவர் என்னைவிட சிறந்தவர் என்று கூறினேன் என்று பேசி இருந்தார் நடிகர் சூர்யா…