தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் கலக்கி கொண்டு வருபவர் நடிகை நயன்தாரா . கடந்த 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நயன்தாரா . இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இன்னும் சொல்லப்போனால் இதன் பிறகு தான் ,
இவர் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றார் . ஆனால் ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகையாம் . இவர் விட்டுக் கொடுத்ததால் தான் நயன்தாரா ஐயா படத்தில் நடித்தாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகை நவ்யா நாயர் தான். பிரபல மலையாள,
திரைப்பட நடிகையான நவ்யா நாயர் தமிழில் வெளியான அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி ,அமிர்தம் ,மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து , ராமன் தேடிய சீதை , ரசிக்கும் சீமானே போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,
மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இவர்தான் முதலில் ஐயா படத்தில் கதாநாயகியாக தேர்வானாராம். ஆனால் அந்த நேரத்தில் நடிகை நவ்யா நாயர் மலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால்,
இந்தப் படத்தை நிராகரித்து விட்டாராம். இதன் பிறகு தான் நயன்தாரா இந்த படத்தில் நடித்து இவ்வளவு பெரிய நடிகையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது…