April 30, 2024

நடுக்கடலில் நடந்து முடிந்த திருமணம் ..!! திடீரென கணவரை பிரிந்த ” திரௌபதி ” பட நடிகை ..!! யோசித்து முடிவெடுங்க என்று சொல்லும் ரசிகர்கள் ..!!

சீலா ராஜ்குமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2016 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ஆறாது சினம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை சீலா ராஜ்குமார்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது திரௌபதி திரைப்படத்தின் மூலம் தான் . இந்த திரைப்படம் இவரை பெரியளவில் பிரபலமாக்கியது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அசுரவதம், டூ லெட் , நம்ம வீட்டு பிள்ளை , மண்டேலா ,ஜோதி, பிச்சைக்காரன் 2 , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சீலா ராஜ்குமார் .

இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே குறும்பட இயக்குனரான தம்பி சோழர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சீலா ராஜ்குமார்.  இதற்கும் இவர்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் தடை போட்டதால் நடுகடலில் மாலை மாற்றி இருவரும் ,

திருமணம் செய்து கொண்டனர் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய கணவரை பிரிவதாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்  நடிகை சீலா ராஜ்குமார் . அந்த வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை சீலா ராஜ்குமார் கூறியதாவது,

 

திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன், நன்றியும் அன்பும் சோழன் என்று பதிவிட்டுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள்  உங்க வாழ்க்கை உங்க கையில் கொஞ்சம் யோசித்து முடிவெடுங்க என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *