தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா . கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறிவிட்டார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
பல வருடங்களாக தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த தமன்னா சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . இதை அடுத்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வரும் தமன்னா,
சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது , தமிழ் சினிமா உட்பட தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களை மட்டுமே மையப்படுத்தி படம் எடுக்கிறார்கள். சினிமா என்பது ஒரு தனிப்பட்ட நபரின் பெருமையை பேசுவதாக இருக்கக் கூடாது. ஆனால் சமீப காலமாக ஹீரோக்களின்,
புகழைப் பாடும் கதைகள் தான் அதிகமாக உருவாகி வருகிறது. இந்தக் கொடுமையை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை . மேலும் பெரிய நடிகர்களின் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை. அப்படி நானும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ஹீரோக்களுக்கு துதிப்பாடும் வேலையை செய்து வருகிறது என்று தைரியமாக கூறியிருந்தார் நடிகை தமன்னா . இதை பார்த்த பலரும் தமன்னாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்…