தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் முக்கியமான ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இவருக்கு பிறகு தான் மற்ற நடிகர்கள் எல்லாம் . அப்படி ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக இருந்தது உலகநாயகன் கமல்ஹாசன் . பின்னர் ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டதால் அந்த இடத்தை விஜய் பிடித்துக் கொண்டார் .
இதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற புரளி கிளம்பியது. அதுமட்டுமில்லாமல் எப்படியாவது சூப்பர் ஸ்டாரின் இடத்தை பிடித்து விட வேண்டும் என்று விஜய் பல்வேறு வேலைகளை செய்து வருவதாகவும் தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் விரைவில்,
அரசியலிலும் களமிறங்க இருக்கிறார் .இந்நிலையில் விஜய்யை பார்த்து சூப்பர் ஸ்டார் பொறாமைப்படுகிறார் என்று பலரும் சர்ச்சையை கிளப்பி வந்தனர். இதற்கெல்லாம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அந்த வகையில் சமீபத்தில்,
பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் லியோ படம் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்கள் . அதற்கு பதில் அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். அதற்காக நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் என்று,
கூறியிருந்தார் . தற்போது சூப்பர் ஸ்டாரின் பேட்டி தவறான கருத்துக்களை பதிவிட்டவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் இதற்கெல்லாம் ஒரு தனி மனசு வேணும் என்றும் கூறி வருகின்றனர் …