April 25, 2024

33 வருடமாகியும் குறையாத காதல் ..!! அப்போதிலிருந்து இப்போது வரை கேப்டனும் , அவருடைய மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ..!!

தற்போது சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கேப்டன் விஜயகாந்துக்கு என்று இப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.  சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு வந்த விஜயகாந்த்  இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதன் பிறகு வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் விஜயகாந்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதன்பிறகு தான் தவிர்க்க முடியாத நடிகராக கொடிகட்டி பறந்து வந்தார் விஜயகாந்த் . இன்னும் சொல்லப்போனால் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி , கமலுக்கே ஒரு போட்டியாளராக இருந்து வந்தார் விஜயகாந்த் .  இப்படி சினிமாவில் கலக்கி கொண்டு வந்த,

விஜயகாந்த் பின்னர் அரசியலிலும் களமிறங்கி வெற்றியை ருசித்தார் . ஆனால் இவருடைய கெட்ட நேரமோ என்னமோ தற்போது உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் . இதனிடையே கடந்த  1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  மேலும் கேப்டனுக்கு திருமணம் ஆகி கிட்டதட்ட 33 வருடங்கள் ஆகிறது . அப்படி அப்போது கேப்டன் மீது எவ்வளவு அன்பாக இருந்தாரோ , அதேபோலத்தான் அவர் உடல்நிலை சரியில்லாத போதும் அன்பாக,

பார்த்துக் கொள்கிறார் பிரேமலதா .  இந்நிலையில் அப்போதிலிருந்து இப்போது வரை கேப்டனும் அவருடைய மனைவியும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *