தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ் . கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான டூயட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் பிரகாஷ்ராஜ். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த பிரகாஷ்ராஜ் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக இருந்து வந்தார் .
அதுவும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,கமல், விஜய், அஜித் ,விக்ரம், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ் . இப்படி தவிர்க்க முடியாத இருந்து வந்த பிரகாஷ்ராஜ் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது .அந்த வகையில் ,
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ் . அதில் தியேட்டர் வசனம் ,சமூகம் சார்ந்த உரையாடல், சினிமா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிரகாஷ்ராஜ் தான் சிறப்பு விருந்தினராக வருகிறார் ,
என்று தெரிந்ததும் எப்படி கல்லூரிக்கு சம்பந்தமே இல்லாத நிகழ்ச்சியை நடத்தலாம் என்று பிரகாஷ்ராஜ் வரக்கூடாது என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அந்த கல்லூரியின் மாணவர்கள். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது .பின்னர் பிரகாஷ்ராஜ்,
கல்லூரிக்கு வந்து விட்டு மீண்டும் சென்ற பிறகு தான் ஒரு கூத்தே நடந்துள்ளது . அது என்னவென்றால் பிரகாஷ்ராஜ் சென்றதும் அவர் இருந்த இடத்தை மாட்டு மூத்திரத்தை வைத்து சுத்தம் செய்து அசிங்கப்படுத்தி உள்ளனர் அந்த கல்லூரி மாணவர்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…
1. Some right wing groups inspired students staged protest against #thinker #actor @prakashraaj at sir MV college, #bhadravathi , shimogga.
2. @prakashraaj interacted on “theater,cinema & society”. “some” cleaned the hall with #cow urine.
When will these clean their minds?. pic.twitter.com/WElJ8hArnI
— Madhu M (@MadhunaikBunty) August 9, 2023