தமிழ் சினிமா உலகில் கடந்த மாதம் பத்தாம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சிவராஜ் குமார், மோகன்லால், விநாயகன், ஜாக்கி சரப், ரம்யா கிருஷ்ணன், சுனில் ,தமன்னா ,வசந்த் ரவி ,யோகி பாபு, மிர்னா மேனன் ,
போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் வசூல் வேட்டை ஆடியது . அப்படி இந்த திரைப்படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்காக ரஜினிகாந்த், நெல்சன்,
அனிருத் போன்ற பிரபலங்களுக்கு விலை உயர்ந்த கார்களை வாங்கிக் கொடுத்திருந்தார் கலாநிதி மாறன் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் 300 பேரை வரவைத்து ஒரு விழா நடத்தி அவர்களுக்கு பரிசை கொடுத்திருக்கிறது ,
சன் பிக்சர்ஸ் நிறுவனம். அந்த வகையில் தங்கத்தால் ஜெயிலர் என்று பொறிக்கப்பட்ட கிப்ட்டு மற்றும் ஒரு சில பொருள்களை அவர்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் கலாநிதி மாறன் . இதை பார்த்த ரசிகர்கள் உங்க மனசு யாருக்கும் வராது என்று கூறி வருகின்றனர்…