ராதிகா சரத்குமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை ஆவார் . மூத்த நடிகரான எம் ஆர் ராதாவின் மகளான ராதிகா கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாமா ருக்மணி ,கன்னித்தீவு ,இன்று போய் நாளை வா ,போக்கிரி ராஜா ,மூன்று முகம் ,தாவணி கனவுகள் ,
நல்லவனுக்கு நல்லவன் ,பிள்ளை நிலா , ஊர்க்காவலன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களின் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரதாப் போத்தன் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டு ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் பிரிந்த ராதிகா கடைசியில் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார் . மேலும் திருமணத்துக்கு பிறகு வெள்ளித்திரை மட்டுமல்லாமல் ,
சின்னத்திரை சீரியல்களிலும் கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகை ராதிகா .இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ராதிகா சமீபத்தில் ஒரு படத்தை பார்த்தேன் எனக்கு வாந்தியும் கோபமும் வருகிறது,
என்று கூறியிருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக அது அனிமல் படமாக தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர். காரணம் அந்த படத்தில் பெண்களை மிகவும் மோசமாக சித்தரித்து இருந்தனர் …