தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. மலையாள படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .
இதன் பிறகு சந்திரமுகி ,கஜினி ,வல்லவன் ,பில்லா ,யாரடி நீ மோகினி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை நயன்தாரா. இதன் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்ற நடிகை நயன்தாரா தற்போது,
பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் . மேலும் இவர் தற்போது நடிப்பதை தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறார் . அந்த வகையில் தற்போது 9 ஸ்கின் என்ற அழகு சாதன பிராண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார் நடிகை நயன்தாரா .
இந்த தொடக்க விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது . இந்த விழாவில் தன்னுடைய முதல் பட ஹீரோவான சரத்குமாரையும் , அவருடைய மனைவியான ராதிகாவையும் மட்டும் சிறப்பு விருத்தினர்களாக அழைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா . கூப்பிட்ட மரியாதைக்காக ,
நேரில் வந்த ராதிகாவும் , சரத்குமாரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…