ஒரு மாநிலத்தை ஆள்வதற்கு சரியான தகுதி இருந்தால் ஒரு நடிகர் கூட முதலமைச்சராகலாம் என்ற சொல்லுக்கு உதாரணமாக இருந்து வருபவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் . இன்னும் சொல்லப்போனால் நடிகர்களுக்கு அரசியல் விதையை போட்டதே எம்ஜிஆர் அவர்கள் தான். இதனால் அவருக்கு பிறகு எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து தோல்வியை சந்தித்தனர் . இதை அடுத்து தற்போது நடிகர் விஜய் ,
புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார் . மேலும் இவர் கட்சி தொடங்கியதில் இருந்தே வாழ்த்துக்களை விட விமர்சனங்கள் தான் அதிகம் குவிந்து வருகிறது . இன்னும் சொல்லப்போனால் பணம் இருந்தால் மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது என்று பலரும் கூறிவருகின்றனர் .
இப்படி இருக்கும் நிலையில் விஜய் முதலமைச்சர் ஆவாரா .? ஆக மாட்டாரா .? என்பதை ஜோசியம் புட்டு புட்டு வைத்துள்ளது . அந்த வகையில் நடிகர் விஜய் வருகின்ற 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக முதலமைச்சர் ஆக மாட்டாராம் . அவர் 2035 ஆம் ஆண்டில் முதலமைச்சராவதற்கு வாய்ப்புள்ளதாக,
ஜோசியத்தில் கூறப்படுகிறது . அதோடு விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கும் முதலமைச்சர் ஆகும் யோகம் உள்ளதாம். ஆனால் அஜித் தான் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார் . மேலும் இதற்கு முன்பு மு க ஸ்டாலின் தேர்தலை சந்தித்தபோது அவர் ஜெயிக்க மாட்டார் என்று,
தான் ஜோசியத்தில் கூறப்பட்டது .ஆனால் அதையும் தாண்டி அவர் செய்து காட்டினார் . அதனால் ஜோசியம் பொய் என்று ஆகிவிடாது ,இருந்தாலும் விஜய்யின் அரசியல் வாழ்க்கை ஜோசியத்தில் சொன்னபடி நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…