தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . இவருக்கு திருமணமாகி சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர் . இதில் விஜய்யின் மகனான சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து வந்தார் . இதை அடுத்து தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளாராம் விஜயின் மகன்.
இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது . மேலும் இந்தப் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிகர் கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இப்படி இருக்கும் நிலையில் இத்தனை வருஷமாக ,
சினிமாவில் இருந்து வரும் விஜய் செய்யாத ஒன்றை செய்யப் போகிறாராம் சஞ்சய். அந்த வகையில் இந்தப் படத்தை பத்து மொழிகளில் இயக்குவதற்கு முடிவு செய்துள்ளாராம் சஞ்சய். பொதுவாகவே ஃபேன் இந்தியா படங்கள் என்றால் ஐந்து மொழிகளில் தான்,
வெளியிடுவார்கள். ஆனால் தன்னுடைய முதல் படத்தை பத்து மொழிகளில் இன்டர்நேஷனல் படமாக வெளியிட உள்ளாராம் சஞ்சய். மேலும் இதே போன்று தான் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படமும் உருவாகி வருகிறதாம் .
இதனால் லைக்கா நிறுவனம் விஜய்யின் மகனுக்காக பல கோடிகளை இறைப்பதற்கு தயாராக உள்ளார்களாம். இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய்யை விட இவர் வித்தியாசமாக யோசிக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…