April 26, 2024

இயக்குனர் அவதாரம் எடுக்கும் அருள்மொழிவர்மன் ..!! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க ..!! தரமான சம்பவம் செய்யப்போகும் ஜெயம்ரவி ..!!

தமிழ் சினிமா உலகில் ஹேட்டர்ஸ்  இல்லாத நடிகர் என்றால் அது நடிகர் ஜெயம் ரவி தான். ஜெயம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை தொடங்கிய ஜெயம் ரவி இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.  படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்கலங்களை தேர்வு செய்து நடித்து பிரபலமான  நடிகர்  ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார் ,

என்று தான் சொல்ல வேண்டும் . இதைஅடுத்து தற்போது இறைவன்,  சைரன் , பிரதர் என்று மூன்று படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி . இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த நடிகர் ஜெயம்  ரவி விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளாராம் .

அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே எனக்கு இயக்குவது தான் ஆசையே என்று தன்னுடைய விருப்பத்தை கூறியிருந்தார். இப்படி இருக்கும்  நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்  நான் படம் எடுத்தால் அவர்தான் ஹீரோ என்று சஸ்பென்ஸை உடைத்துள்ளார் ஜெயம் ரவி .

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் விஜய் சேதுபதி தான் . இவரை ஹீரோவாக போடுவதற்கு காரணம்,  ஒரு நடிகருக்கு இருக்க வேண்டிய எல்லா தகுதியும் நடிகர் விஜய் சேதுபதியிடம்  உள்ளதாம் . இதனால் அவரை வைத்து ஈசியாக வேலை வாங்கிவிடலாம் என்று கூறியிருந்தார்,

நடிகர் ஜெயம்ரவி . இதனால் கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது .  இந்த தகவலால் தற்போது ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *