May 1, 2024

நான் இதை பண்ணியிருந்தால் அப்பா உயிருடன் இருந்திருப்பாரு ..!! தப்பு பண்ணிவிட்டேன் ..!! கண்ணீர் மல்க கூறிய எஸ் பி பி யின் மகள் ..!!

மறைந்த எஸ் பி பாலசுப்பிரமணியம்  ஒரு முக்கியமான தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ஆவார்.  எம்ஜிஆர் காலத்திலேயே தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய எஸ் பி பாலசுப்பிரமணியம் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருந்தார் . குறிப்பாக இவருடைய பாடல்கள் அனைத்தும் காலங்கள் கடந்தும் பேசப்பட்டு வருகிறது . இன்னும் சொல்லப்போனால் இவருடைய குரலுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது,

என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி, கன்னடம் ,மலையாளம் என்று சுமார் 50,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்திருக்கிறார் எஸ் பி பாலசுப்பிரமணியம். இப்படி இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால்,

பாதிக்கப்பட்டு திடீரென இறந்துவிட்டார் எஸ் பி பாலசுப்பிரமணியம் . இப்படி இருக்கும் நிலையில் எஸ்.பி எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மகளான பல்லவி பேட்டி ஒன்றில் தன்னுடைய அப்பா குறித்து கூறியதாவது , கொரோனா காலகட்டத்தில் அப்பாவிடம் ஹைதராபாத்துக்கு செல்ல,

வேண்டாம் என்று நான் சொல்லாமல் இருந்தது தான் ,நான் செய்த மிகப்பெரிய தவறு . என்னுடைய அம்மாவும் எவ்வளவோ தடுத்து பார்த்தார்.  ஆனால் என்னுடைய அப்பா கேட்கவே இல்லை . ஒருவேளை நான் அன்று நீங்கள் போக வேண்டாம் அப்பா என்று சொல்லி இருந்தால் ,

அவர் கேட்டிருப்பாரோ என்ற எண்ணமும் அடிக்கடி என்னை சூழ்ந்து கொண்டே இருக்கிறது . அப்பாவை பற்றி நினைக்கும் போதெல்லாம் அவர் மருத்துவமனையில் இருந்த தருணங்கள் தான் என்னுடைய கண் முன் வந்து செல்கிறது என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார் பல்லவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *