மறைந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் ஒரு முக்கியமான தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். எம்ஜிஆர் காலத்திலேயே தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய எஸ் பி பாலசுப்பிரமணியம் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருந்தார் . குறிப்பாக இவருடைய பாடல்கள் அனைத்தும் காலங்கள் கடந்தும் பேசப்பட்டு வருகிறது . இன்னும் சொல்லப்போனால் இவருடைய குரலுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது,
என்று தான் சொல்ல வேண்டும். அப்படி தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி, கன்னடம் ,மலையாளம் என்று சுமார் 50,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்திருக்கிறார் எஸ் பி பாலசுப்பிரமணியம். இப்படி இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால்,
பாதிக்கப்பட்டு திடீரென இறந்துவிட்டார் எஸ் பி பாலசுப்பிரமணியம் . இப்படி இருக்கும் நிலையில் எஸ்.பி எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மகளான பல்லவி பேட்டி ஒன்றில் தன்னுடைய அப்பா குறித்து கூறியதாவது , கொரோனா காலகட்டத்தில் அப்பாவிடம் ஹைதராபாத்துக்கு செல்ல,
வேண்டாம் என்று நான் சொல்லாமல் இருந்தது தான் ,நான் செய்த மிகப்பெரிய தவறு . என்னுடைய அம்மாவும் எவ்வளவோ தடுத்து பார்த்தார். ஆனால் என்னுடைய அப்பா கேட்கவே இல்லை . ஒருவேளை நான் அன்று நீங்கள் போக வேண்டாம் அப்பா என்று சொல்லி இருந்தால் ,
அவர் கேட்டிருப்பாரோ என்ற எண்ணமும் அடிக்கடி என்னை சூழ்ந்து கொண்டே இருக்கிறது . அப்பாவை பற்றி நினைக்கும் போதெல்லாம் அவர் மருத்துவமனையில் இருந்த தருணங்கள் தான் என்னுடைய கண் முன் வந்து செல்கிறது என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார் பல்லவி…