சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓர் முன்னணி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்த சூப்பர் ஸ்டார் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார் ரஜினிகாந்த் . இதன் பிறகு கடந்த 48 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார் ரஜினிகாந்த் .
மேலும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது . இதைத் தொடர்ந்து மூன்று படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . மேலும் பல கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் மிகவும்,
எளிமையான வாழ்க்கை தான் சூப்பர் ஸ்டார் வாழ்ந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் அவர் 150 கோடியை சூதாடி இழந்திருக்கிறாராம் . அந்த வகையில் பிரபல சினிமா பட விமர்சகரான பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது, ரஜினி,
மிகப்பெரிய கோடீஸ்வரர் . அப்படி இருந்தும் அவர் எளிமையான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் ஒரு சாதாரண வாழ்க்கையை மட்டும் வாழவில்லை . ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் . பின்னர் அதை எப்படி செலவு,
செய்வது என்று தெரியாமல் அமெரிக்காவில் சூதாடி அந்த பணத்தை எல்லாம் இழந்துவிட்டார் என்று கூறிஇருந்தார் பிஸ்மி . தற்போது அந்தப் புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் ஷாக்கில் இருந்து வருகின்றனர் …