அசீம் ஓர் பிரபலமான தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் ஜெயா தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த அசீம் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து தெய்வம் தந்த வீடு ,பிரியமானவள் ,பகல் நிலவு ,கடைக்குட்டி சிங்கம்,
நிறம் மாறாத பூக்கள் ,பூவே உனக்காக போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். இப்படி சீரியலில் நடித்து பிரபலமான அசீம் கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் . கடைசியில் பிக் பாஸ் டைட்டில் வின்னர்,
பட்டத்தையும் வென்றார் அசீம் . அப்படி அவர் ஜெயித்த போது அவருக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது . இருந்தாலும் பரிசாக வென்ற ஐம்பது லட்சம் பணத்தில் 25 லட்சம் பணத்தை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தார்.
அப்படி சொல்லி பல மாதங்கள் ஆகியும் அவர் எதையும் செய்யவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார் அசீம் . அந்த வகையில் சொன்னபடியே பிக் பாஸில் வென்ற 25 லட்சம் ரூபாய் பணத்தை அசீம் அறக்கட்டளை என்று ஒன்றை தொடங்கி,
அதில் மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி இருக்கிறார். தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அசீமுக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்…