கடந்த மாதம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார் , விநாயகன் , ஜாக்கிசரப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ,தமன்னா, சுனில் ,யோகி பாபு, மிர்னா மேனன் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் .
இந்த படத்திற்கு வெறித்தனமாக இசையமைத்திருந்தார் அனிருத். இப்படி வெளியான திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது. ஆனால் இந்தப் படத்தில் முதலில்,
நடிக்க இருந்தது வேறொரு முன்னணி நடிகர் தானாம். அவர் வேறு யாரும் இல்லை தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி தான் . சூப்பர் ஸ்டாரிடம் கதை சொல்வதற்கு முன்பே நடிகர் சிரஞ்சீவி யிடம் இந்த கதையை கூறி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். ஆனால் கதையை கேட்ட,
நடிகர் சிரஞ்சீவி படத்தில் ரொமான்ஸ்சே இல்லை என்று சொல்லி நிராகரித்து விட்டாராம் . இதன் பிறகு தான் சூப்பர் ஸ்டாரிடம் கதையை சொல்லி ஓகே பண்ணி இருக்கிறார் இயக்குனர் நெல்சன் . இதன் பிறகு இவர்களுடைய கூட்டணியில் வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத,
அளவிற்கு வெற்றி படமாக அமைந்தது . இதைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை சிரஞ்சீவி தவற விட்டு விட்டார் என்று கூறி வருகின்றனர்…