மெஹ்ரீன் பிர்சாடா ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு சந்திப் கிஷன் நடிப்பில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே ,
பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2020 ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தின் மூலம் தான் . இந்தப் படத்தில் சாதனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா . இந்தப் படம் மட்டுமல்லாமல் ,
நோட்டா என்ற தமிழ் படத்திலும் நடித்திருந்தார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்,
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறியதாவது , ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட் டாகி விட்டால் அது எந்த மாதிரி காட்சியாக இருந்தாலும் நான் நடித்து விடுவேன். இன்னும் சொல்லப் போனால் படுக்கையறை காட்சியாக இருந்தாலும் கூட நான் நடிப்பதற்கு தயார் தான்.
ஏனென்றால் அதுவும் நடிப்புதான் என்று கூறியிருந்தார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. இதைப் பார்த்த ரசிகர்கள் இவரை வெளிப்படையாக கூறிவிட்டார், இனிமேல் பட வாய்ப்பு இவரை தேடி வரும் என்று கூறி வருகின்றனர்…