தமிழ் திரையுலகில் ஒரு வித்தியாசமான நடிகர் என்றால் அது நடிகர் விக்ரம் தான். கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விக்ரம். ஆனால் இந்த படம் சரியாக ஓடவில்லை . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 25 படங்களுக்கு மேல் நடித்தும் விக்ரமுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை .
இதன் பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான சேது என்ற திரைப்படம் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். இதன் பின்னர் தான் விக்ரம் என்றால் யார் என்று அனைவருக்கும் தெரிந்தது . பின்னர் இந்த படத்தை,
தொடர்ந்து ஜெமினி, தூள் ,சாமி ,பிதாமகன் ,அருள், அந்நியன் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விக்ரம். குறிப்பாக ஒரு படத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் மெனக்கெடுவார் ,
நடிகர் விக்ரம். இதனாலே யே இவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விக்ரம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…