தமிழ் சினிமா உலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடல் . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை துளசி . இவர் மூத்த நடிகையான ராதாவின் இளைய மகள் ஆவார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த துளசி பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான,
யான் என்ற படத்தில் நடித்திருந்தார் . ஆனால் இந்தப் படங்களுக்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகை துளசி. இப்படி இருக்கும் நிலையில் துளசியின் அக்காவான கார்த்திகாவுக்கு ,
சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. அப்போது எடுத்த துளசியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது. அந்த அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார் நடிகை துளசி . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…