சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா . கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஐஸ்வர்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தையும் , சினிமா வீரன் என்ற டாக்குமென்ட்ரி படத்தையும் இயக்கியிருந்தார் ஐஸ்வர்யா .
இதன் பிறகு பல வருடங்களாக இயக்குவதையே நிறுத்திய ஐஸ்வர்யா மீண்டும் லால் சலாம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் . இந்த படத்தில் விஷ்ணு விஷால் ,விக்ராந்த் ,விக்னேஷ் , லிவிங்ஸ்டன்,செந்தில் ,ஜீவிதா, கே எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா ,நிரோஷா,
அனந்திகா ,விவேக் பிரசன்னா போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே வரும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். மேலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும்,
ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படி வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. குறிப்பாக கதை வலுவாக இருந்தாலும் , இயக்குவதில் ஐஸ்வர்யா சொதப்பிவிட்டார் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாரின்,
அழுகை காட்சியும் கேலிக்கு உள்ளாகியுள்ளது . அந்த வகையில் அந்த காட்சியில் சூப்பர் ஸ்டார் அழுகிறாரா .?சிரிக்கிறாரா என்று தெரியாதது போல தான் இருக்கிறது.இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் சிங்கம் போல இருந்த சூப்பர் ஸ்டாரை ஐஸ்வர்யா இப்படி மாற்றிவிட்டாரே என்று கூறிவருகின்றனர் …
— VCD (@VCDtweets) February 12, 2024