தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தில் மூலம் அறிமுகமான தமன்னா தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன் ,ஆனந்த தாண்டவம் , அயன் ,பையா ,தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,
விஜய் ,அஜித் ,சூர்யா ,விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த தமன்னா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் , ஹிந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் சில வருடங்களாக தமிழ் சினிமா பக்கமே ,
தலை காட்டாமல் இருந்து வந்த நடிகை தமன்னா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா கூறியதாவது , எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா .
தற்போது அவர் கங்குவா என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் என்பது எனக்கு தெரியும். சமீபத்தில் அந்த படத்தின் ப்ரோமோ வெளியாகி இருந்தது . அதை பார்த்ததும் மிரண்டு போய்விட்டேன் . அதோடு அந்தப் படத்தின் கதாநாயகியான திஷா பதானியை சந்தித்தபோதும் கங்குவா படம்,
குறித்து கேட்டிருந்தேன் . ஆனால் அவர் சொல்லவே இல்லை . இருந்தாலும் நான் சூர்யாவிடம் தற்போது கேட்க விரும்பும் ஒரே கேள்வி கங்குவா படத்தின் அப்டேட் கொடுங்கள் என்று தான். ஆனால் இதற்கு சூர்யா பதில் சொல்வாரா என்பது தெரியவில்லை என்று கூறி இருந்தார் நடிகை தமன்னா …