புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு பல பிரபலங்கள் பதவி ஆசையில் அரசியலில் களம் இறங்கினார்கள். ஆனால் கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாண்டி யாராலும் அரசியலில் நிலைக்க முடியவில்லை . இதை அடுத்து தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார் . இவரை தொடர்ந்து நடிகர் விஷாலும் மறைமுகமாக அரசியலுக்கு வருவதை அறிவித்திருந்தார் .
இப்படி இருக்கும் நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பிய போது அவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார் ரஜினி . இந்நிலையில் வேட்டையன் படப்பிடிப்பிற்காக ஏர்போர்ட் சென்ற ரஜினியிடம் விஷால் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் .
அதற்கு பதிலளித்த சூப்பர் ஸ்டார் அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என்று முடித்துக்கொண்டாராம். மேலும் அரசியலை பற்றி வாய் திறந்தாலே பிரச்சனை வருகிறது என்பதால் தான் ரஜினி இப்படி கூறியதாக கூறப்படுகிறது …