அமலா ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1986 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அமலா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு ,ஒரு இனிய உதயம் ,வேலைக்காரன் ,வேதம் புதிது ,அக்கினி நட்சத்திரம், கொடி பறக்குது, சத்யா ,
மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி, மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அப்படி தெலுங்கு,
படங்களில் நடிக்கும் போது பிரபல முன்னணி தெலுங்கு நடிகரான நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா. திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் நடிகை அமலா பட்டுப் புடவையை மட்டும் எப்போதும் ,
கட்டவே மாட்டாராம். அதற்கு காரணம் என்னவென்றால் , உயிர்களிடத்தில் ஜீவகாருண்யம் பரப்பு வராக இருந்து வருகிறாராம் நடிகை அமலா . அதனால் அசைவ உணவு கூட சாப்பிட மாட்டாராம் . இப்படி இருக்கும் நிலையில் பல பட்டுப்புழுக்களை கொண்டு ஒரு பட்டுப் புடவையை உருவாக்குகிறார்கள்.
அதை எப்படி என்னால் உடுத்த முடியும் . குறிப்பாக மற்ற உயிர்களை பாதிக்கும்படி இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நான் செய்யவே மாட்டேன் என்று கூறியிருந்தார் நடிகை அமலா. இதை பார்த்த ரசிகர்கள் நடிகை அமலாவுக்கு இப்படி ஒரு கொள்கையா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…