சமீப காலமாக விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல தரமான கலைஞர்கள் உருவாகி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பல போட்டியாளர்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார்கள். அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர்தான் பாலா.
தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் பாலா . இதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கே பி ஒய் பாலா . மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சிகளை ,
தொகுத்து வழங்கியும் வருகிறார். அதோடு தான் சம்பாதிப்பதில் பாதி பணத்தை ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்கு செலவு செய்வது, பெரியோர்களுக்கு உதவி செய்வது என்று சத்தமே இல்லாமல் பல விஷயங்களை செய்து வருகிறார் கே பி ஒய் பாலா . அப்படி தன்னுடைய,
பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்காக ஒரு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார் பாலா . அந்த வகையில் இதுவரை பாலாவுக்கு கூட ஒரு கார் இல்லை . ஆனால் ஐந்து வருடமாக அந்த முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி தருவதற்கு,
போராடி வந்தாராம் கே பி ஒய் பாலா . தற்போது தன்னுடைய பிறந்தநாளில் ஆம்புலன்சை வழங்கி இருந்தார் கே பி ஒய் பாலா. இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இப்படி ஒரு நல்ல மனசா .? என்று சொல்லி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…
View this post on Instagram