எஸ்வி சேகர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் எஸ் வி சேகர். இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் மூலம் தான் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, கோபுரங்கள் சாய்வதில்லை,
டௌரி கல்யாணம், பூவே பூச்சூடவா, திருமதி ஒரு வெகுமதி, கதாநாயகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் எஸ்வி சேகர். மேலும் இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த எஸ் வி சேகர் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ணா கிருஷ்ணா,
என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் எஸ் பி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம் . அந்த வகையில் பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக கருத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் எஸ் வி சேகர் .
இதைத்தொடர்ந்து இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் தற்போது நீதிமன்றம் எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் வாய வச்சிட்டு சும்மா இருந்தா தான என்று கூறி வருகின்றனர்…