தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை இவானா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவானா . கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நாச்சியார் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தின் மூலம்தான்.
இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கள்வன் ,எல்ஜி எம் ,காம்ப்ளக்ஸ் என்று பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை இவானா . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவானாவிடம் உங்களுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வீர்கள்,
என்று கேட்டுள்ளனர் . இதற்கு பதில் அளித்த இவானா , எப்போதும் சினிமாவையே முழுசாக நம்பி கொண்டிருக்க முடியாது . அது எப்போது சறுக்குமென்று யாருக்கும் தெரியாது . அதனால்தான் நான் தொடர்ந்து மேற்படிப்புகளை படித்துக் கொண்டு வருகிறேன். சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும்,
நானே சொந்தமாக தொழில் செய்வேன் , என்னுடைய அப்பாவும் தொழிலதிபராக தான் இருக்கிறார். அதனால் அவருடைய வழியில் நானும் செல்வேன் என்று கூறியிருந்தார் நடிகை இவானா . இதை பார்த்த ரசிகர்கள் பிழைக்க தெரிஞ்ச பொண்ணு என்று கூறி வருகின்றனர்…