May 2, 2024

” பூ ” நடிகையுடன் சிவகார்த்திகேயனுக்கு காதலா ..?? புதிய குண்டை தூக்கிப்போட்ட தனுஷ் ..!! இருக்கிற பிரச்சனையில் இது வேறயா ..??

தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்த சிவகார்த்திகேயனின் பெயர் தற்போது அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது . இதற்கு காரணம் டி இமான் கிளப்பிய பஞ்சாயத்து தான்.  இதனால் வெளியில் கூட தலை காட்ட முடியாமல் முடங்கி கிடக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  இப்படி இருக்கும் நிலையில் பல வருடங்களுக்கு முன்பே சிவகார்த்திகேயன் குறித்த கிசுகிசுவை,

கூறியிருக்கிறார் நடிகர் தனுஷ்.  அந்த வகையில் இன்று சிவகார்த்திகேயன் இவ்வளவு உயரத்திற்கு வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது தனுஷ் என்றுதான் சொல்ல வேண்டும் . காரணம் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக  வைத்து படம் தயாரித்து இருந்தார் தனுஷ்.

ஆனால் இப்போது இவர்கள் இருவரும் பெரியளவில் பேசிக்கொள்வதில்லை . இந்நிலையில் அப்படி இவர்கள் இருவரும் நட்பாக பழகி கொண்டிருக்கும்போது மரியான் படத்தில் ஒரு வசனம் இடம் பெற்றது.  அதில் தந்தை பெயரும் மகன் பெயரும் கொண்ட நடிகருக்கும்,

பூ நடிகைக்கும் காதலா என்று பேசி இருப்பார் தனுஷ் . இது சிவகார்த்திகேயனை வைத்து தான் எழுதப்பட்டதாக கூறியிருந்தார் தனுஷ் . அந்த வகையில் தந்தை பெயரும் ,மகன் பெயரும் கொண்ட நடிகர் என்றால் சிவகார்த்திகேயன் தான் . ஆனால் பூ நடிகை யார் என்பதை மட்டும் ,

தனுஷ் சொல்லவே இல்லை . இதைப் பார்த்த ரசிகர்கள் பூ நடிகை என்றால் பார்வதி தான் என்று கூறி வருகின்றனர் . இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காத சிவகார்த்திகேயன் தற்போது சிக்கி உள்ளதால் பழைய புராணங்களை எல்லாம் கிளறி வருகின்றனர் நெட்டிசன்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *