தமிழ் சினிமா உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாயாண்டி குடும்பத்தார் . இந்த படத்தில் மணிவண்ணன் ,பொன்வண்ணன், சீமான், கே பி ஜெகன், தருண் கோபி , ஜி எம் குமார் , ரவி மரியா ,நந்தா பெரியசாமி ,சிங்கம் புலி, ராஜ்கபூர் ,இளவரசு ,மயில்சாமி , பூங்கொடி , பூவிதா , கனியா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .
இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் நடித்திருந்த பத்து நடிகர்கள் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இதனாலேயே இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது . அதோடு குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக,
அமைந்தது. இப்போது டிவியில் போட்டாலும் கூட இந்த படத்தை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் . இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளாராம் இந்த படத்தில் நடித்திருந்த ,
இயக்குனர் கே பி ஜெகன். மேலும் இயக்குனர் ராசு மதுரவன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தற்போது மாயாண்டி குடும்பத்தினர் படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி இயக்க உள்ளாராம் இயக்குனர் கே பி ஜெகன். இவர் இதற்கு முன்பு புதிய கீதை , கோடம்பாக்கம் ,
போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருந்தார் .குறிப்பாக முதல் பாகத்தில் நடித்திருந்த எல்லா பிரபலங்களும் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதோ அந்த அறிக்கையை நீங்களும் பாருங்க…