தமிழ் ரசிகர்களால் ” இடுப்பழகி ” என்று அழைக்கப்பட்ட நடிகை தான் சிம்ரன் . கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான விஐபி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சிம்ரன். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒன்ஸ்மோர், அவள் வருவாளா, கண்ணெதிரே தோன்றினாள் ,துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி ,பம்மல் கே சம்பந்தம் ,கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல திரைப்படங்களில்,
நடித்து தனக்கென ஒரு தனி இடத்தில் பிடித்துக் கொண்டார் நடிகை சிம்ரன். மேலும் நடிகை சிம்ரன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த சிம்ரன் ,
கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் பாபா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிம்ரனின் மூத்த மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் சிம்ரன் மகனா இது .? சும்மாவே நாலு பெத்த பறக்க விடுவார் போல என்று கூறி வருகின்றனர்…