பொதுவாகவே தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி ரஜினியுடன் நடிப்பதற்காக 35 வருடமாக காத்துக் கொண்டிருக்கிறார் ஒரு நடிகை . அவர் வேறு யாருமில்லை நடிகை நிரோஷா தான்.
மூத்த நடிகர் எம் ஆர் ராதாவின் மகளான நிரோஷா கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான அக்னி நட்சத்திரம் என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூரசம்ஹாரம் ,செந்தூரப்பூவே ,பாண்டி நாட்டு தங்கம், இணைந்த கைகள்,
போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நிரோஷாவுக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாம் . ஆனால் கிட்டத்தட்ட நடிக்க வந்து 35 வருடங்கள்,
ஆகியும் அது நிறைவேறவில்லைதாம் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 52 வது வயதில் நிரோஷாவின் ஆசை நிறைவேறியுள்ளது . அந்த வகையில் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில்,
நடித்துக் கொண்டு வருகிறார் ரஜினி . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 35 வருட கனவு நிறைவேற உள்ளது என்று கொண்டாட்டத்தில் துள்ளி குதித்து வருகிறாராம் நடிகை நிரோஷா…