தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் . இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் . ஆனால் சமீபத்தில் இவரின் அடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .இதனால் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ,
ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் படத்தை பெரிய அளவில் நம்பி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் . இந்நிலையில் 30 வயதை கடந்தும் கீர்த்தி சுரேஷ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் ரசிகர் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கே ,
பெண் கேட்டு வந்ததாக கூறியிருந்தார் . அப்போது இவர் வீட்டில் இல்லையாம். அந்த நேரத்தில் வீட்டில் வேலை பார்ப்பவர்களிடம் என்னுடைய கணவர் போல நினைத்துக் கொண்டு , கீர்த்தி சுரேஷ் ஏன் உதயநிதியுடன் நடித்தார் என்று கேட்டாராம். கடைசியில் இந்த விஷயத்தை உதயநிதியிடமே கூறிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்…