தமிழ் சினிமா உலகில் கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாண்டவர் பூமி . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஷமிதா . இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ஷமிதா . ஆனால் இதன்பிறகு இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை .
பின்னர் சீரியல்களில் கலக்கிக்கொண்டு வந்தார் நடிகை ஷமிதா . அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சிவசக்தி, பிள்ளை நிலா, புகுந்த வீடு, பொன்னூஞ்சல் ,மௌன ராகம் ,பேரன்பு ,பொன்னி போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார் . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே,
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகுமாரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஷமிதா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஷமிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…