வடிவேலு ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்து வந்தார் . அதுவும் அப்போது இவர் நடித்த காமெடி காட்சிகள் இப்போதும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது . மேலும் வடிவேலுவுடன் சிங்கமுத்து நடித்த காமெடி காட்சிகளை பற்றி,
சொல்லவே தேவையில்லை . அந்த அளவிற்கு அந்த காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது . ஆனால் ஒரு கட்டத்தில் சிங்கமுத்துவும் , வடிவேலுவும் மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சிங்கமுத்து கூறியதாவது,
நான் படம் எடுப்பதை தெரிந்துகொண்ட வடிவேலுவின் மேனேஜர்கள் சிங்கமுத்துவிடும் அவருடைய மகனை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு பணம் இருக்கிறது. அவர் கண்டிப்பாக உங்களிடம் இருந்து தான் கொள்ளையடித்து இருப்பார் என்று கூறியுள்ளனர் .
மேலும் வடிவேலுவுக்கு படிப்பறிவு இல்லாததால் அவர்களுடைய பேச்சை அப்படியே நம்பி விட்டார் . அதோடு ஒருவர் கெட்டுப் போக வேண்டும் என்பதைத்தான் நினைப்பார் வடிவேலு. அவருடன் நடித்த எல்லா காமெடி நடிகர்களுக்குமே நல்ல திறமை இருக்கிறது . ஆனால் அவர்,
எங்களை அமுக்கி அவர் பெயர் சம்பாதித்துக் கொண்டார் . இதற்கெல்லாம் கடைசி காலத்தில் நிச்சயம் வடிவேலு வருத்தப்படுவார் . பேசாம நாம நல்லவனாகவே இருந்திருக்கலாம் என்று கண்ணீர் வடிப்பார் என்ற சாபம் விட்டிருந்தார் நடிகர் சிங்கமுத்து…