பா ரஞ்சித் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பா ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த பா ரஞ்சித் தொடர்ந்து மெட்ராஸ் ,கபாலி ,காலா ,சார்பட்டா பரம்பரை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார்.
இதை அடுத்து தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித் . இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. மேலும் இயக்குனராக கலக்கிக்கொண்டு வந்த பா ரஞ்சித் தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள்,
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு , ரைட்டர் போன்ற பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிறுவயதில் இருந்தே இளையராஜாவின் மீது அதீதப் பிரியம் கொண்ட பா ரஞ்சித் தற்போது இளையராஜாவை,
முதல் முறையாக சந்தித்திருக்கிறார் . இந்த திடீர் சந்திப்புக்கு காரணம் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்கள் இசை என்கிற விழா விரைவில் நடைபெற இருக்கிறது . அதற்கான அழைப்பிதழை தான் இளையராஜாவுக்கு கொடுத்திருக்கிறார் பா ரஞ்சித்.
அப்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “எண்ணமெல்லாம் வண்ணமம்மா” என்று பதிவிட்டுள்ளார் பா ரஞ்சித். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…