கடந்த வாரம் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள் . அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், த்ரிஷா , கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில்,
உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் இதுவரை 461 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்திய பேட்டி,
ஒன்றில் கூறியதாவது , லியோ திரைப்படம் எங்களுக்கு லாபகரமான படமாக அமையவில்லை . காரணம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்திற்கு ஷேர் வாங்கி உள்ளார்கள் . இதனால் பெரும்பாலான தியேட்டர்களில் விருப்பமே இல்லாமல் தான் இந்த படத்தை,
போட்டு இருந்தார்கள் . மேலும் பக்கத்து மாநிலமான கேரளாவில் 60% ஷேர் என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் 80 சதவீதம் வாங்கி இருக்கிறார்கள். குறிப்பாக ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிப்பதற்காக லியோ படத்தின் தயாரிப்பாளர் அதிக வசூல் கணக்கு,
காட்டுவதாகவும் கூறப்படுகிறது . மேலும் இந்த திரைப்படம் இவ்வளவு வசூலித்ததா என்பது யாருக்கும் தெரியாது . லியோ படத்தோடு வேறொரு படம் வந்திருந்தால் பாதி தியேட்டர் கூட லியோ படத்திற்கு கிடைத்திருக்காது என்று கூறியிருந்தார் திருப்பூர் சுப்பிரமணியன்…