April 28, 2024

ஜெயிலர் வசூலை முந்துவதற்காக ..!! பொய் கணக்கை காட்டினாரா லியோ தயாரிப்பாளர் ..?? உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம் ..!!

கடந்த வாரம் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள் . அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத்,  த்ரிஷா , கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின்,  மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில்,

உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் .  இப்படி வெளியான திரைப்படம் இதுவரை 461 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்திய பேட்டி,

ஒன்றில் கூறியதாவது , லியோ திரைப்படம் எங்களுக்கு லாபகரமான படமாக அமையவில்லை . காரணம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்திற்கு ஷேர் வாங்கி உள்ளார்கள் . இதனால் பெரும்பாலான தியேட்டர்களில் விருப்பமே இல்லாமல் தான் இந்த படத்தை,

போட்டு இருந்தார்கள் . மேலும் பக்கத்து மாநிலமான கேரளாவில் 60% ஷேர் என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் 80 சதவீதம் வாங்கி இருக்கிறார்கள்.  குறிப்பாக ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிப்பதற்காக லியோ படத்தின் தயாரிப்பாளர் அதிக வசூல் கணக்கு,

காட்டுவதாகவும் கூறப்படுகிறது . மேலும் இந்த திரைப்படம் இவ்வளவு வசூலித்ததா என்பது யாருக்கும் தெரியாது . லியோ படத்தோடு வேறொரு படம் வந்திருந்தால் பாதி தியேட்டர் கூட லியோ படத்திற்கு கிடைத்திருக்காது என்று கூறியிருந்தார் திருப்பூர் சுப்பிரமணியன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *