தமிழ் சினிமாவை கலக்கி வரும் தரமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அருண் விஜய். மூத்த நடிகரான விஜயகுமாரின் மகனான அருண் விஜய் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பிரியம் ,கங்கா கௌரி ,துள்ளித் திரிந்த காலம் ,அன்புடன், ஜனனம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ,
இவருக்கென்று ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது . இதன் பிறகு இவர் நடித்த குற்றம் 23 ,
செக்க சிவந்த வானம் ,தடம்,யானை போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது . இதை அடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அருண் விஜய் நடிப்பில் உருவான மிஷன் என்ற படம் வெளியாகி இருந்தது . மேலும் அயலான், கேப்டன் மில்லர் போன்ற ,
பெரிய படங்கள் வந்ததால் இந்த படத்திற்கு போதிய அளவில் தியேட்டர் கிடைக்கவில்லை. ஆனால் கடைசியில் இந்த திரைப்படம் தான் பொங்கல் வின்னராக மாறி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஸ்டன்ட் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தால் ,
தான் அனுபவித்த வலிகளையும் பகிர்ந்திருக்கிறார் அருண் விஜய் . மேலும் இந்த படத்தின் வெற்றியால் என்னுடைய எல்லா வழியும் மறந்து விட்டது என்று பகிர்ந்திருந்தார் அருண் விஜய்…