சினிமாவைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகளுக்கு திருமண வயதை கடந்த பிறகு தான் திருமணமே நடக்கும். இது சினிமாவில் யதார்த்தமாக நடப்பது தான் . ஆனால் 40 வயதை, 50 வயதை கடந்தும் கூட இன்னும் பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர். அதில் யார் யார் என்று பார்ப்போம் . அதில் முதலாவதாக உள்ளவர் காமெடி நடிகையான கோவை சரளா. 61 வயதாகியும் கூட,
திருமணமே வேண்டாம் என்று இருந்து வருகிறாராம் கோவை சரளா . இவரைத் தொடர்ந்து நடிகை சோபனா 53 வயதாகும் சோபனா திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்து தற்போது ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் . இவரை தொடர்ந்து நடிகை நக்மா,
50 வயது ஆகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . ஆனால் இவருக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருக்கிறதாம். இவரைத் தொடர்ந்து நடிகை தபு இவருக்கும் 50 வயது ஆகிறது. ஆனாலும் சிங்கிளாகவே இருந்து வருகிறார் .
இவர்கள் மட்டுமல்லாமல் அனுஷ்கா ,திரிஷா ,வரலட்சுமி ,கிரண், பிரியா ஆனந்த், கீர்த்தி சுரேஷ் , சாய் பல்லவி போன்ற பல நடிகைகள் திருமண வயதை கடந்தும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதோ யார் யாருன்னு நீங்களே பாருங்க …