தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் வடிவேலு . இவருடைய காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது . ஆனால் இடையில் தேவையில்லாமல் பேசி பல வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் நடிகர் வடிவேலு. பின்னர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.
ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரவில்லை . இதைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலு. இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது .
இன்னும் சொல்லப்போனால் இந்தப் படத்தால் தான் வடிவேலுக்கு மறுவாழ்வு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இந்த படத்திற்கு பிறகு ஹீரோவாக கமிட் ஆகியுள்ளாராம் வடிவேலு . அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்கு னர்களில் ஒருவர் தான்,
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி இருந்தார் . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்தார் கௌதம் வாசுதேவ் மேனன் . ஆனால் சிம்பு இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையாம் .
இதனால் தற்போது வடிவேலுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம் கௌதம் வாசுதேவ் மேனன் . இந்த படத்தை வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளாராம் . இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…