April 30, 2024

கீர்த்தி பச்சை தண்ணீரில் மட்டும் தான் குளிப்பாள் ..!! அவளுக்கு இப்படியொரு பழக்கம் இருக்கு ..!! அம்மா சொன்ன காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.  முன்னாள் நடிகையான மேனகாவின் இளைய மகளான கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்தார் . பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து,

ரஜினி முருகன், ரெமோ ,பைரவா ,தானா சேர்ந்த கூட்டம், சர்கார் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் . மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மொழி  மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

ஆனால் அண்மைக்காலமாக இவருடைய நடிப்பில் வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பில் பெறவில்லை . இப்படி இருக்கும் நிலையில் குளிக்கும் போது இதை செய்தால் சீக்கிரம் வயதாகி விடுமாம்,  கீர்த்தி சுரேஷுக்கு இப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறதாம் .

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்  கீர்த்தி சுரேஷின் அம்மா கூறியதாவது , கீர்த்தி எப்போதுமே பச்சை தண்ணீரில் தான் குளிப்பாள் . அது மழைக்காலமாக இருந்தாலும் சரி, வெயில் காலமாக இருந்தாலும் சரி , அவளுக்கு இப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறது . அது என்னவென்றால் ,

சூடு தண்ணீரில் குளித்தால் தோள்கள் தளர்ச்சியாகி விடும்.  சீக்கிரம் வயதான தோற்றம் வந்துவிடும் என்று கூறுவாள் . ஒருமுறை ஊட்டியில் படப்பிடிப்பின் போது அதிகாலை நாலு மணிக்கு எழுந்து பச்சை தண்ணீரில் தான் குளித்தாள் என்று கூறியிருந்தார் கீர்த்தி சுரேஷின் அம்மா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *