கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்த பிறகு தான் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் வெளியில் வருகிறது. அந்த வகையில் கேப்டன் சொன்ன ஒரு வார்த்தைக்காக கிட்டத்தட்ட 450 குடும்பங்களை வாழ வைத்து வருகிறாராம் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் , வேல்ஸ் யூனிவர்சிட்டியின் உரிமையாளருமான ஐசரி கே கணேஷ் தான்.
தமிழில் வெளியான ஒரு சில படங்களில் நடித்திருந்த ஐசரி கணேஷ் தேவி ,எல்கேஜி ,கோமாளி ,மூக்குத்தி அம்மன் ,வெந்து தணிந்தது காடு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து இருக்கிறார் . இந்நிலையில் இவர் மாதம்தோறும் நடிகர் சங்கத்தில் இருக்கும்,
கஷ்டப்படும் 450 கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த தொகையை கொடுத்து வருகிறாராம் . அதற்குக் காரணமே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தானாம் . அந்த வகையில் ஐசரி கணேஷின் தந்தை இறந்தபோது அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் தான்,
இறுதி அஞ்சலியை முன்னின்று நடத்திக் கொடுத்தாராம் . இதன் பிறகு உங்களால் முடிந்த தொகையை கஷ்டப்படும் கலைஞர்களுக்கு கொடுக்கலாமே என்று ஐசரி கணேசிடம் விஜயகாந்த் கேட்டிருக்கிறார் . மேலும் விஜயகாந்த் அப்போது உதவியதை மறக்காத ,
ஐசரி கணேஷ் உடனே சரி என்று சொல்லிவிட்டாராம். அந்த வகையில் கேப்டன் சொன்ன ஒரு வார்த்தைக்காக கிட்டத்தட்ட 15 வருடமாக இந்த உதவியை செய்து வருகிறாராம் ஐசரி கணேஷ்…