April 25, 2024

கேப்டன் சொன்ன ஒரு வார்த்தைக்காக ..!! 450 குடும்பங்களை வாழ வைக்கும் பிரபலம்..!! 15 வருடமா இதை செய்கிறாரா ..??

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்த பிறகு தான் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் வெளியில் வருகிறது.  அந்த வகையில் கேப்டன் சொன்ன ஒரு வார்த்தைக்காக கிட்டத்தட்ட 450 குடும்பங்களை வாழ வைத்து வருகிறாராம் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் , வேல்ஸ் யூனிவர்சிட்டியின் உரிமையாளருமான ஐசரி கே கணேஷ் தான்.

தமிழில் வெளியான ஒரு சில படங்களில் நடித்திருந்த ஐசரி கணேஷ் தேவி ,எல்கேஜி ,கோமாளி ,மூக்குத்தி அம்மன் ,வெந்து தணிந்தது காடு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து இருக்கிறார் . இந்நிலையில் இவர் மாதம்தோறும் நடிகர் சங்கத்தில் இருக்கும்,

கஷ்டப்படும் 450  கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த தொகையை கொடுத்து வருகிறாராம் . அதற்குக் காரணமே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தானாம் . அந்த வகையில் ஐசரி கணேஷின் தந்தை இறந்தபோது அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் தான்,

இறுதி அஞ்சலியை முன்னின்று நடத்திக் கொடுத்தாராம் . இதன் பிறகு உங்களால் முடிந்த தொகையை கஷ்டப்படும் கலைஞர்களுக்கு கொடுக்கலாமே என்று ஐசரி கணேசிடம் விஜயகாந்த் கேட்டிருக்கிறார் . மேலும் விஜயகாந்த் அப்போது உதவியதை மறக்காத ,

ஐசரி கணேஷ் உடனே சரி என்று சொல்லிவிட்டாராம்.  அந்த வகையில் கேப்டன் சொன்ன ஒரு வார்த்தைக்காக கிட்டத்தட்ட 15 வருடமாக இந்த உதவியை செய்து வருகிறாராம் ஐசரி கணேஷ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *