கடந்த சில நாட்களாகவே திரிஷாவின் பிரச்சனைதான் காட்டுத்தீ போல பரவி வருகிறது. மேலும் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி கொச்சையாக பேசி இருந்ததால் தற்போது திரிஷாவுக்கு தான் அதிக ஆதரவு கொடுத்து வருகின்றனர் . ஆனால் மன்சூர் அலிகான் நான் தவறாக பேசவில்லை , அதை அப்படி தவறாக கட் செய்து விட்டார்கள் என்று தன்னுடைய பக்கம் இருக்கும் நியாயத்தை கூறியிருந்தார்.
இந்நிலையில் திரிஷா என்ன கண்ணகியா என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன் . அந்த வகையில் இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது , லியோ படத்தின் வெற்றி விழாவில் மன்சூர் அலிகான்ரேப் சீன் இல்லை என்று சொல்லிய பொழுது திரிஷா ,விஜய்யெல்லாம் சிரித்தார்கள் .
மேலும் கற்புக்கரசிகளாகவும், கண்ணகியாகவும் இருக்கும் இவர்கள் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கவில்லையா.? அது மட்டுமல்லாமல் அரைகுறையாக எவ்வளவு ஆட்டம் போட்டு இருப்பீங்க, சினிமா ஒரு வியாபாரம் அவ்வளவு தான் என்று மன்சூர் அலிகானுக்கு ஆதரவு குரல் கொடுத்திருந்தார் பயில்வான் ரங்கநாதன்…