April 28, 2024

பண்ணவில்லை விமர்சனம்..!! நான் கேட்பது மக்களுக்கு விமோசனம் ..!! அடுக்கு மொழி வசனத்தில் விஜய்க்கு வாழ்த்து சொல்லிய டி ராஜேந்தர் ..!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் . அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய்க்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . ஒரு பக்கம் இப்படி இருந்தாலும் மறுபக்கம் விஜய்யால் அரசியல் செய்ய முடியுமா .? ஒரு நடிகரால் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் ,

என்றெல்லாம் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.  இருந்தாலும் விஜய்யின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர் . மேலும் தற்போது விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார் . இதை முடித்த கையோடு ,

அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது . இப்படி  இருக்கும் நிலையில் இயக்குனரும், நடிகருமான டி ராஜேந்தர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தன்னுடைய அடுக்கு மொழி வசனத்தில் பஞ்சு பேசியிருக்கிறார் . அந்த வகையில் அரசியல் என்பது பொது வழி ,

அதில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் , யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் , விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள், அவரைப் பற்றி நான் பண்ணவில்லை விமர்சனம், நான் கடவுளிடம் கேட்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விமோசனம் என்று ,

தன்னுடைய அடுக்கு மொழியில் வசனம் பேசி செய்தியாளர்களை அதிர வைத்தார் டி ராஜேந்தர் . மேலும் இவர் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தின் விழாவில் வசனம் பேசி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *